
பூவரசு 10வது ஆண்டு நிறைவு
வாசகர்விழா 2001
03.03.2001 சனிக்கிழமை மாலை.

திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி இந்திராதேவி மகேஸ்வரன் ஆகியோர் சுடர்விளக்கேற்றி ஆரம்பித்துவைத்த இந்த விழாவில் அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து இறைவணக்கப் பாடல் இடம்பெற்றது. பாடலை திரு க.பாலசுப்பிரமணியம் பாடினார். வரவேற்புரையை திருமதி சசிகலா தேவராஜா வழங்கினார்.
ஜேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான வாசகர்களும் படைப்பாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் தரமான பல கலை இலக்கியப் படைப்புக்கள் அரங்கேறின.
எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத்தரும் நன்னோக்கில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பூவரசு இனிய தமிழ் ஏடு வருடந்தோறும் ஆண்டு விழாக்களை நடாத்தி பல்துறை சார்ந்த கலைஞர்களது கலை முயற்சிகளுக்கும் உற்சாகமளித்து வருகிறது.
ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான படைப்பாளர்கள் பூவரசின் பரிசில்களை வென்றிருப்பது புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திற்குப் பொலிவு சேர்க்கும் விடயமாகும்.
வளரும் இளைய தலைமுறைக்கென பூவரசின் இணைப்பாக வரும் எங்கள் இளந்தளிர்கள் மூலம் இளையோர்க்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. உறுப்பெழுத்துப் போட்டி, சித்திரம் வரைதல் போட்டி, கட்டுரைப் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, சொற்தேர்வுப் போட்டி எனப் பலவகையான போட்டிகளில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் பங்குபற்றி தமது மொழியார்வத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இந்த வாசகர் விழாவின் முதல் இரண்டுமணிநேரங்களும் இளையோரே பங்குகொண்ட பூக்கள் மலரும் பொழுது என்னும் பல்சுவைக கதம்ப நிகழ்ச்சியாகத் தமிழ்மணம் பரப்பியது.

இந்நிகழ்ச்சியில், தங்கப் பாப்பாவும் தமிழ்தந்த பெரியாரும் என்னும் குறுநாடகம், மழலையர் நடனங்கள், மனிதரைப்போல.. என்னும் தாளலய நாடகம் இவற்றோடு கதைப்பாட்டு, இளையோர் உரை என்பனவும் இடம்பெற்றன
இந்நிகழ்ச்சிகளை செல்விகள் பிரதீபா மகேஸ்வரன், ஜனனி தேவராஜா, தனுஷா தனபாலசிங்கம், சிந்துகா தங்கராஜா, ஷாளினி தனபாலசிங்கம், அனோஜா தங்கராஜா ஆகியோர் அழகுறத் தொகுத்து வழங்கினர்.

மழலையர் நடனம், சிறுவர் நடனம் என்பவற்றோடு கோலாட்ட நடன நிகழ்ச்சியையும் திருமதி சாந்தராணி பத்மகுமார் தயாரித்து வழங்கினார்.

பூவரசுக்கு புகழாரம் சூடும் விதமாக ஒரு கும்மிநடனத்தை பிறேமன் தமிழாலய ஆசிரியை திருமதி கன்னிகா சந்திரபாலன் தயாரித்து வழங்கியிருந்தார்.

பூக்கள் மலரும் பொழுது நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிறேமன் நடன ஆசிரியை செல்வி ஸ்ரீரஞ்சனி குணரத்தினம் அவர்களின் மாணவ மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.


பூவரசு 10வது ஆண்டு நிறைவுமலரை பூவரசின் பத்தாண்டு கால வாசகர்களில் ஒருவரான ராட்டிங்கன் தமிழர் புனரமைப்பு ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் திரு.செ.செல்வகுமார் அவர்களிடம் பூவரசு கலை இலக்கியப் பேரவை உறுப்பினரான திரு.சு.மகேந்திரமூர்த்தி கையளித்து வெளியிட்டு வைத்தார்.

இடைவேளையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு சுவைசேர்ப்பது போல் பாடகர் திரு.சு.நடராஜா அவர்கள் பூவரசுக்கான தனது வாழ்த்துப்பாவை இசையோடு பாடி பூவரசை வாழ்த்தினார்.
பூவரசு 10வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் பரிசுகளை வென்ற படைப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் நேரில் வருகைதந்து பூவரசு விழாவை மேலும் சிறப்பித்தது பாராட்டக்கூடிய அம்சமாக இருந்தது.
விழாவில் பங்குகொண்ட இளங்கலைஞர்கள் உட்பட அனைத்துக் கலைஞர்களும் பூவரசு கலை இலக்கியப் பேரவையால் கௌரவிக்கப்பட்டார்கள்.
ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான படைப்பாளர்கள் பூவரசின் பரிசில்களை வென்றிருப்பது புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திற்குப் பொலிவு சேர்க்கும் விடயமாகும்.
வளரும் இளைய தலைமுறைக்கென பூவரசின் இணைப்பாக வரும் எங்கள் இளந்தளிர்கள் மூலம் இளையோர்க்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. உறுப்பெழுத்துப் போட்டி, சித்திரம் வரைதல் போட்டி, கட்டுரைப் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, சொற்தேர்வுப் போட்டி எனப் பலவகையான போட்டிகளில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் பங்குபற்றி தமது மொழியார்வத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இந்த வாசகர் விழாவின் முதல் இரண்டுமணிநேரங்களும் இளையோரே பங்குகொண்ட பூக்கள் மலரும் பொழுது என்னும் பல்சுவைக கதம்ப நிகழ்ச்சியாகத் தமிழ்மணம் பரப்பியது.

இந்நிகழ்ச்சியில், தங்கப் பாப்பாவும் தமிழ்தந்த பெரியாரும் என்னும் குறுநாடகம், மழலையர் நடனங்கள், மனிதரைப்போல.. என்னும் தாளலய நாடகம் இவற்றோடு கதைப்பாட்டு, இளையோர் உரை என்பனவும் இடம்பெற்றன
இந்நிகழ்ச்சிகளை செல்விகள் பிரதீபா மகேஸ்வரன், ஜனனி தேவராஜா, தனுஷா தனபாலசிங்கம், சிந்துகா தங்கராஜா, ஷாளினி தனபாலசிங்கம், அனோஜா தங்கராஜா ஆகியோர் அழகுறத் தொகுத்து வழங்கினர்.

மழலையர் நடனம், சிறுவர் நடனம் என்பவற்றோடு கோலாட்ட நடன நிகழ்ச்சியையும் திருமதி சாந்தராணி பத்மகுமார் தயாரித்து வழங்கினார்.

பூவரசுக்கு புகழாரம் சூடும் விதமாக ஒரு கும்மிநடனத்தை பிறேமன் தமிழாலய ஆசிரியை திருமதி கன்னிகா சந்திரபாலன் தயாரித்து வழங்கியிருந்தார்.

பூக்கள் மலரும் பொழுது நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிறேமன் நடன ஆசிரியை செல்வி ஸ்ரீரஞ்சனி குணரத்தினம் அவர்களின் மாணவ மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.


பூவரசு 10வது ஆண்டு நிறைவுமலரை பூவரசின் பத்தாண்டு கால வாசகர்களில் ஒருவரான ராட்டிங்கன் தமிழர் புனரமைப்பு ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் திரு.செ.செல்வகுமார் அவர்களிடம் பூவரசு கலை இலக்கியப் பேரவை உறுப்பினரான திரு.சு.மகேந்திரமூர்த்தி கையளித்து வெளியிட்டு வைத்தார்.

இடைவேளையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு சுவைசேர்ப்பது போல் பாடகர் திரு.சு.நடராஜா அவர்கள் பூவரசுக்கான தனது வாழ்த்துப்பாவை இசையோடு பாடி பூவரசை வாழ்த்தினார்.
பூவரசு 10வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் பரிசுகளை வென்ற படைப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் நேரில் வருகைதந்து பூவரசு விழாவை மேலும் சிறப்பித்தது பாராட்டக்கூடிய அம்சமாக இருந்தது.
விழாவில் பங்குகொண்ட இளங்கலைஞர்கள் உட்பட அனைத்துக் கலைஞர்களும் பூவரசு கலை இலக்கியப் பேரவையால் கௌரவிக்கப்பட்டார்கள்.
பூவரசு வாசகர் விழாவின் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட இலண்டன் தமிழ் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளர் திரு.சிவ.தணிகாசலம் அவர்கள் நடுவராகப் பஙகேற்ற எங்கள் எதிர்காலம் எவரிடம் என்னும் தலைப்பிலமைந்த விவாத அரங்கு இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இளையோரின எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை பெற்றோர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதால் எழக்கூடிய சாதக பாதகமான விளைவுகளை இளையோர் நால்வரும் ஆராயும் நிகழ்வாக இது அமைந்தது.
தமது எதிர்காலத்தைத் தாமாகவே தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கே தரப்படவேண்டும் என்ற கருத்தை இளைஞர் அணியினர் முன்வைத்தனர். இளைஞர் அணி சார்பில் செல்வன் சஜீதன் சந்திரபாலன், செல்வன் ஜெகன் குலதாசன், செல்வன் விபுலன் ஞானரத்தினம் செல்வன் பிரசன்னா மகேஸ்வரன், ஆகியோர் பங்குகொண்டனர்.
பெற்றோர் சார்பில் திருமதி விஜயா அமலேந்திரன் அவர்களும், திரு கொற்றையூர் வாசன் அவர்களும் இளையோரது கருத்தை ஆதரித்தும், திருமதி மகேஸ்வரி வரதராஜா அவர்களும் திரு இராஜன் முருகவேல் அவர்களும் இளையோரது கருத்தை மறுத்தும் விவாதித்தனர்.

இளையோர் தத்தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையுடையவர் எனினும் பெற்றோரின் அறிவுரையையும் அவர்கள் துணைகொண்டு செயல்படவேண்டும் என்றும் நடுவர் தீர்ப்பு வழங்கி விவாத அரங்கை இனிதாய் நிறைத்து வைத்தார்.

நகைச்சுவை மூலம் நல்லதொரு தகவலைச் சொல்லும் அம்சமாக பாடாத பாட்டுக்கு போடாத மெட்டு என்னும் ஓரங்க நாடகம் சபை முழுவதையும் குலுங்கச் சிரிக்க வைத்து, கலைகளையும் கலைஞரையும் மதிக்கும் பண்பு நம்மிடையே வளரவேண்டும் என்றகருத்தை ஆழமாக அழுத்தமாகச் சொல்லி வைத்தது.
விழாவின் இறுதி அம்சமாக இந்துமகேஷின் சிறுகதை நாடகமான இருட்டு மனங்கள் அரங்கேறியது. இந்நாடகத்தில் திருவாளாகள், குலதாசன், பாலசுப்பிரமணியம், ஞானச்செல்வம், தங்கராஜா, திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம், ஆகியோரோடு முருகனாக செல்வன் சாரங்கன் பத்மகுமாரும் பங்குகொணடு சிறப்பித்தார்கள்.

வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் ஓவியக் கலைவேள் மு.க.சு.சிவகுமாரன், பத்திரிகையாளர் வீ.ஆர் வரதராஜா, எழுத்தாளரும் கவிஞருமான திரு எழிலன், கவிஞர் திரு. இரா.சம்பந்தன், எழுத்தாளர் திருமதி ஜெயா நடேசன், சில்லையூர் திரு.சிங்கராயர், திருமதி தாமரா சுப்பிரமணியம், திருமதி சித்திராதேவி தங்கராஜா, திரு.க.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பூவரசை வாழ்த்தி உரையாற்றினர்.
இளந்தளிர்களுக்கான போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தினை ஓவியக்கலைவேள் மு.க.சு.சிவகமாரன் அவர்களும் சிறுகதை கவிதை கட்டுரைப் போட்டிகளில் பங்குகொண்ட வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பினை திரு.வீ.ஆர்.வரதராஜா அவர்களும் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர்களாக செல்வன் பிரசன்னா மகேஸ்வரனுடன் திருவாளர்கள் தே. தங்கராஜா, ஞானச்செல்வம், சக்திவேல் ஆகியோரும் தங்கள் குரல் வளத்தால் விழாவுக்கு மெருகு சேர்த்தார்கள்.
பத்தாவது ஆண்டை நிறைத்து மேலும் தன் பணியைத் தொடரும் பூவரசின் கலை இலக்கிய பணிகளுக்கு தன்னுடன் கரம் கோர்த்துள்ள நண்பர்களுக்கும் சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய பூவரசு ஆசிரியரும் வெளியீட்டாளரும் எழுத்தாளருமான திரு. இந்துமகேஷ் தொடரும் காலங்களிலும் பூவரசைப் புரிந்து வரவேற்கும் வாசகர்கள் படைப்பாளர்கள் அதனை வளர்த்தெடுத்துச் செல்ல ஒத்துழைக்கவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
"உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்" என விரிந்து பரந்துவிட்ட பூவரசு மேன்மேலும் சிறப்புறத் தன் கலை இலக்கியப் பணியைத் தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்த பூவரசு வாசகர் விழா 2001.
பூவரசின் வளர்ச்சி புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியத்திற்குப் பொலிவுதரும் முயற்சி என்பதை மறுப்பதற்குமில்லை மறப்பதற்குமில்லை.
"நாம்வாழத் தமிழ் வாழும் தமிழ்வாழ நாம் வாழ்வோம்!" என்பது பூவரசு சொல்லும் மற்றுமொரு பொன்னான கருத்து அல்லவா?
-பார்வையாளன்
நிழற்படப்பிடிப்பு: