Mittwoch, 23. März 2016

பூவரசு- 4வது ஆண்டுநிறைவுக் கலை இலக்கிய மாலை 1995



பூவரசு- 4வது ஆண்டுநிறைவுக் 
கலை இலக்கிய மாலை 1995







முமுநிலவு ஒளிபரப்ப
முற்றத்தில் நாம்கூட
பழுத்த தலைமுடியோடும்
நம் பசி தீர்க்க
சோறு குழைப்பாள் நம் அன்னை!
நின்ற நிலையிலேயே
வளைத்தெடுப்போம் ஒருகோப்பையை!
எந்தக் கோப்பையிலும்
கிடைக்காத ஒரு சுகந்தம்
பூவரசு இலை..
இல்லை...இல்லை... பூவரசு இலைக்
கோப்பையிலே கிடைத்திடுமே!

இங்கு முழுநிலவுண்டு
சோறுண்டு பருப்புண்டு
தொட்டுக்கொள்ள ஊறுகாயுமுண்டு
ஆனால்
அன்று முற்றத்தில் கிடைத்த
சுகமில்;லை
ஏங்கினோம்!
வேலையுண்டு பணமுண்டு எனப்
பின்வாங்கினோம்!
பின்பு வங:கிக்கு ஏகினோம்!
நாலு ஆண்டுகளுக்கு முன்னே
கம்பேர்க் ஆட்டோபானில்
பிறேமன் அவுஸ்வார்டில்
ஓரு பூவரசின் மணம் வீசியது!

நாலுபேரைக் கேட்டபோது
இந்த மணம் பரப்பும் 
இந்து மகேஷின் வீடும் வேலியும்
இங்குதான் எனத் தெரியவந்தது

இன்று பூவரசு மணம்
பிறேமனோடு நிற்கவில்லை
பிறநாடுகளிலும் மணக்கிறது
ஏன் எம் தாய்நாட்டிலும்
நாட்டிட நல்ல இனப் பூவரசு
இதுதான் என
ஐந்தாவது ஆண்டு நிறையுமுன்னே
ஐரோப்பாவும் முடிவெடுக்கும்
எம் தாய்நாட்டிலும்
தரமான ஒரு பூவரசாக
மணம்பரப்ப வேண்டுமென்று!

- பூவரசு 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.மு.க.சு. சிவகுமாரன் (வெற்றிமணி ஆசிரியர்) அவர்கள் சிறப்புரையில் வழங்கிய வாழ்த்துக் கவிதை-




உலகத்தை இல்லமாக்கி  
உள்ளத்தை சொந்தமாக்கிய ஆசிரியர் இந்துமகேஷ்.

-வீ.ஆர்.வரதராஜா


பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய மாலை 15.01.1995 ஞாயிற்றுக்கிழமை பிறேமன் நகரில் சிறப்புற நடைபெற்றது.

ஜேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான கலை இலக்கிய ஆhவலர்களும் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் நிறைவான பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஓவியருமான திரு.க.சிவகுமாரன் (கண்ணா) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.




திருமதி வில்ரூட் கடெல்கா, பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி ஆகியோர் மங்களவிளக்கேற்ற திருமதி இந்துமகேஷ் வரவேற்புரை  நிகழ்த்தினார்.

திருமதி வசந்தாதேவி புவனேந்திரனின் இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து உலகமே நம் இல்லம், புள்ளிப் புள்ளி மானே, சின்னப் பூவே ஆகிய பாடல்களுக்கு சிறவர் சிறுமியர் அபிநய நடனங்களை அள்ளி வழங்கினர்.

பூவரசு 4வது ஆண்டு மலரின் முதற்பிரதியை பூவரசு வாசகர் வட்ட உறுப்பினர் திரு. இராஜகுமார் அவர்களிடம் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் கையளித்தார்.


பூவரசு வாசகர்வட்ட உறுப்பினர்களான திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார், திரு.மு.சிவராஜா, திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி வதனி விஜயகுமார், திரு வடிவேலு வாசன் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினாhகள்.

பூவரசு 4வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்புக்களை நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றிய திரு. வீ.ஆர் வரதராஜா தொகுத்து வழங்கினார்.
சிறுகதைக்கான முதற்பரிசை திரு. மா.தியாகேஸ்வரன் அவர்களும், கட்டுரைக்கான முதற்பரிசை திரு.அ.வேணுகோபாலன் அவர்களும், கவிதைக்கான முதற்பரிசை திரு. பொ.கருணாகரமூர்த்தி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களோடு போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் பூவரசு ஊக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது.

ஆண்டுகள்தோறும் புதிதாய் ஒரு கலை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தம பூவரசு இந்த ஆண்டு சிறுவர் சிறுமியரைப் பெரியோராய்ச் சித்தரித்து தாயே உனக்காக என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியிருந்த கவியரங்கு  அனைவரையும் வியப்புக் கலந்த மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.

கவியரங்கத் தலைவராக செல்வன் ஜகன் குலதாசன் பங்கேற்க ஆசிரியராக செல்வன் சஜீதன் சந்திரபாலனும், மருத்துவராக செல்வன் ரமணராஜா செல்வரத்தினமும் விவசாயியாக செல்வன் ஆனந்த் குலதாசனும், வயோதிபத் தாயாக செல்வி காயத்திரி யோகநாதனும், போராளிப் பெண்ணாக செல்வி ஜனனி தேவராஜாவும், காய்கறிவிற்கும் பெண்ணாக செல்வி பிரதீபா மகேஸ்வரனும் உருமாற்றம் பெற்று கவிதைகள் பாடி சபையினரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப பெற்றுக்கொண்டனர். கவியரங்கில் பங்குகொண்டவர்களை கொற்றையூர் வாசன் வாழ்த்திக் கவி படித்தார்.

பூவரசு விழாவுக்கு மெருகேற்ற பேர்லினிலிருந்து வருகை தந்திருந்த  ஹானப்பிரியா நாட்டியப்பள்ளி மாணவிகளான செல்விகள் தீபனா சற்குணநவராஜா, கிறிஸ்ரல் மரியதாஸ், ஆகியோரின் தனிநடனங்களும், நடன ஆசிரியை திருமதி மேனகா சுரேஸ்குமார் தயாரித்து வழங்கிய கார்த்திகேயா நாட்டிய நாடகமும், மரியன்னை புகழ்பாடும் கோடிவரம் கொடுத்தாய் பாடலுக்கான அபிநய நடனமும் பெருவரவேற்பைப் பெற்றன.

இடைவேளையைத் தொடர்ந்து இசைக்கோலம் மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது.  பூவரசு விழாக்களில் இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்கள் தொடர்ந்து இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் புதிய பாடல்கள் புதிய மெட்டுக்களில் இசை பரப்பின.

பூவரசு வாசகர் வட்டத்தைச் சோந்த திருவாளர்கள் நடராஜா, பாலசுப்பிரமணியம், ஞானச்செல்வம,; பத்மநாதன், சற்குருநாதன், திருமதிகள் வசந்தாதேவி புவனேந்திரன், பெனடிக்ரா ஞானச்செல்வம், பாமினி உதயகுமார், சசிகலா தேவராஜா ஆகியோருடன் செல்வன் பிரசன்னா, செல்வி பிரதீபா ஆகியோர்  கானம் வழங்கிய இம்மெல்லிசை நிகழ்ச்சியின்போது கிற்றார் வாத்தியத்தின் மூலம் தமிழிசைத் துறைக்குப் புகழ் சேர்த்துவரும் கலைஞர்கள் ஜோன்ஸன் சகோதரர்கள் பூவரசு வாசகர் வட்டத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்

பூவரசு வாசகர் வட்டத்தின் சால்ஸ்கிற்றார் உறுப்பினரும் கீபோர்ட் வாத்தியக் கலைஞருமான எஸ்.தேவராஜா இசைநிகழ்ச்சியைப் பொறுப்பேற்றிருந்தார்.

நிகழ்ச்சியின் இறுதி அம்சமாக பூவரசு தயாரித்து வழங்கிய கோடையில் வந்த மழை குறும்படம் இடம்பெற்றது

பெற்றோரை இழந்து அகதியாக வெளிநாடுவந்து துன்பமுறும் ஒரு பிஞ்சு நெஞ்சத்தின் உணர்வுகள் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. பங்குகொண்ட கலைஞர்கள் இயல்பான தங்கள் திறமையால் பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தார்கள்.

பூவரசு ஒவ்வோர் ஆண்டுவிழாவின்போதும் புதிய பல கலைஞர்களை அறிமுகப்படுத்துவது போலவே இந்த ஆண்டும் இரண்டு புதிய அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

திரு இரா. உதயகுமார், திருமதி சாந்தராணி பத்மகுமார் இருவரும் புதிய அறிவிப்பாளர்களாக அறிமுகமாகி விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

பூவரசு சிறப்புற விழாக்களை நடாத்துவதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பும் உற்சாகமுமே காரணம் என்று தன் நன்றியுரையில் குறிப்பிட்டார் பூவரசு ஆசிரியர் திரு. இந்துமகேஷ்.
எழுத்துப்பணியோடு ஆண்டு தோறும் கலை விழாக்கள் மூலம் கலைப் பணியையும் தொடரும் பூவரசு இனிய தமிழ் ஏடு இம்மாதம் முதல், மாத இதழாக மலரும் என்பது வாசகர்களுக்கு மகிழ்வூட்டும் செய்திதானே!


(நன்றி: தமிழருவி - ஜெர்மனி பெப்ரவரி 1995)

Sonntag, 20. März 2016

பூவரசு - சிறுகதைப் பக்கங்கள் -3












தொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு
“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான்.

“ஓ........ஜா.....!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.
கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி....? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”
இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன.......
தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம்
என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.
ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.
கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.
குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது.
உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது.
அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது.
ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.
“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.
அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்:
“ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ”
ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?
அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:
“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ”
“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ”
அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை.
பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.
திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்.........
அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.
“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.
ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்.........
“குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?”
(வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)
“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:
“சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ”
திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:
“எ...எ..எ.என்னவாம்..........? ”
எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் “நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள்.
நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ”


ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்..........

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-)
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ”

“ விஷேசமெண்டு......?- ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:
“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்.......
பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ”
என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.


சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.
அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான்.
அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை “என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?”
என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ”


“ பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை...... அதுதான் அழுகிறாள்.... ”


“ சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”


அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....”

“ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி
வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“..... நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது.

கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்
மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.
சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?”

“ எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........”

“ என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ”

“ அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“ என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“ அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை....... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கி;றதின்ற படிமம் அது..! ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.
குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸ{க்குப் போவமே.......? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ!

நாங்கள் மெல்ல மாறுவோமே............. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும்.


(ஜெர்மனி -பூவரசு- இதழ் தன் ஏழாவது ஆண்டுநிறைவையொட்டி நடாத்திய சிறுகதைப்போட்டியில்1998 முதற்பரிசை பெற்ற கதை.)

Mittwoch, 16. März 2016

பூவரசு - எங்கள் இளந்தளிர்கள்!


















2001 தைத்திங்கள். 
 பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 10வது ஆண்டு நிறைவு வாசகர் விழாவுக்கென நிகழ்ச்சித் தயாரிப்பில் முனைந்திருந்த நேரம். எங்கள் இளந்தளிர்களுக்கான நிகழ்ச்சிகளை வகுத்துக்கொணடிருந்தபோது இளந்தளிர்களில் ஒருவரான கஜனி சொன்னாள்: 
இம்முறை நான் பூவரசு மேடையில் பாடப்போகிறேன்.!
நல்லது! வழக்கம்போல் பூவரசு மேடைகளில் பாடப்படும் மெல்லிசைப் பாடல்களில் ஒன்றைப் பாடலாம் என்றேன்.
இல்லை நான் ஏற்கனவே பாடலைத் தெரிந்து வைத்திருக்கிறேன் அதே பாடலைத்தான் பாடப் போகிறேன் என்றாள்.
அனுராதா ஸ்ரீராம் பாடிய பக்திப்பாடல்களில் ஒன்றான மாவிளக்கு ஏற்றிவைத்தேன் மாரியம்மா என்ற பாடல் அது.
பாடினால் அந்தப் பாடலைத்தான் பாடுவேன் இல்லாவிட்டால் பாடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். அவளது விருப்பப்படியே அந்தப் பாடலை விழாமேடையில் பாடினாள்.
அவளது குரலில் அந்தப் பாடல் ஒலித்து 15 ஆண்டுகளைக் கடந்தாயிற்று.
இன்று (16.03.2016)அவளது நினைவைச் சுமந்துவரும் 15வது ஆண்டு.



கள்ளமில்லா மலரொன்று
காலத்தை வென்றதின்று!


புன்னகை இதழ் விரியும் உன் பூமுகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
காலம் பொல்லாதது என்று சொல்லாமல் சொல்கிறது அது எனக்கு.
ஆனால் காலம் என்பதற்கு என்ன கணக்கு?
நேற்று இன்று நாளை என்பதெல்லாம் இந்த உடலோடு வாழும் வரைதானே
என்றும் வாழும் உயிர்களுக்கு இந்தக் கணக்கு எதற்கு?
என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன் இப்போதெல்லாம்!
சின்ன வயதில் நீ புலால் மறுத்து முழுமையான ஒரு சைவப்பெண்ணாகவே உன்னை ஆக்கிக் கொண்டாயே.. அப்போது உன்னை ஒரு பிடிவாதக்காரியாகவே என்னால் எண்ணிக்கொள்ள முடிந்தது.
ஆனால் உன்னைப் பெற்றவளும் பெற்றவனும் உன்னில் உன் வார்த்தைகளில் கட்டுண்டு உனக்காகவே தங்களையும் மாற்றிக்கொண்டு உன்விருப்பம் ஒன்றே தமது விருப்பமாக மாற்றிக்கொண்டார்களே- அதை இப்போது நினைக்கிறேன்.
பேச்சில் செயலில் மென்மையே நிறைந்தவளாய் மற்றவர் முகங்களில் துயர்காண விரும்பாதவளாய் வளர்ந்துகொண்டிருந்த நீ எல்லார் இதயங்களையும் கலங்கடித்து மறைந்துவிட எப்படித் துணிந்தாய்?
இயற்கையின் நியதி இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறாய் நீ
பக்தி நிறைந்த உன் பாசமுகம் படைத்தவனின் பாதார விந்தத்தில் நிலைத்திருக்கும் என்பது நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை
இது நீ எங்களிடம் விதைத்துச் சென்ற நம்பிக்கை.

மாவிளக்கு ஏற்றிவைத்தேன் மாரியம்மா- என்
மனசுக்குள்ளே வெளிச்சமாக வாடியம்மா
- பூவரசு மேடையில் நீ புன்னகையோடு பாடிய பாடல் அது.
பொருள் புரிந்துதான் அதைப் பாடினாயோ!
ஆனால் நாங்கள் புரிந்துகொள்கிறோம் இப்போது.
உன் ஆத்ம சாந்திக்காக அந்தப் பராசக்தியையே  இறைஞ்சுகிறோம்

பூவரசு கலை இலக்கியப் பேரவையோடு
உன் அன்புக்குரிய
இந்துமகேஷ் மாமா.






கஜனி!

அவள் இதழ்விரித்தால் அரும்பும் இளைய புன்னகையில் எத்தனையோ அர்த்தங்கள்!
எல்லாக் குழந்தைகளையும்போல் அவளும் பிறந்தாள், தவழ்ந்தாள், வளர்ந்தாள், நடந்தாள், படித்தாள், ஆளானாள்.
எல்லாம் ஒரு சிறுகதைபோல் சிறியதொரு கவிதையைப்போல் சிறியதொரு திரைப்படம் போல்.!
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு.
ஆனால் இவளது முடிவு எதிர்பாராதது. எல்லா முடிவுகளுமே எதிர்பாராதவைதான் என்றாலும் இவள் முடிவு எண்ணிப்பார்க்கவே முடியாத முடிவு. இப்படியும் முடிவு வருமா என்று இளைய  உள்ளங்களையே திகைக்கவைத்த முடீவ!

கஜனி!
அவள் ஒரு சிறு காவியம்
எப்போதும் சுறுசுறுப்பு
சுறுசுறுப்பினிடையே சின்னச் சின்னக் குறும்பு.
வளர்ந்தாலும் மாறாத குழந்தைமனம்
ஆனாலும் மனத்தினிலே பெரியமனிதத் தனம்.
சின்ன வயதினிலே உயிர்களிடத்தில் அதிக அன்பு.
அதனால் மாமிசத்தில் வெறுப்பு
மெள்ள மெள்ளஅவள் மாறினாள்.
தெய்வபக்தியும் அவளோடு சேர்ந்தே வளர்ந்தது.
பள்ளிக்குப் போகும்போதும் பயபக்தியாய் விபூதி அணிந்துசெல்வது அவள் வழக்கம்
பள்ளித்தோழர்கள் வேடிக்கை செய்யமாட்டார்களா என்றால் சிரிப்பாள்.
அவர்கள் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்பாள்.
அவள் உலகைவிட்டுப் பிரிவதற்கு சிலநாட்கள் முன்பாக தனது நிறைய ஆசைகளைச் சொன்னாள் அன்னையிடம்.
கலைகள் மீது அவள் கொண்டிருந்த ஆர்வத்தைச் சொன்னாள்.
இசை, நடனம் என்பவற்றில் அவள் கொண்டிருந்த அக்கறை வியப்பைத தந்தது.

பூவரசு மேடையிலே நின்று அவள் ஒரு பாடலை- பக்திப்பாடலை- அம்மனை நினைந்துருகிப் பாடியபோது பார்த்தவர்கள் அதிசயித்தார்கள். மௌனமே முதல்மொழிபோல் மற்றவர்க்குக் காட்சிதரும் கஜனியா  இது என்ற கேள்வியால் எழுந்த ஆச்சரியம். பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அது பதினைந்து நாட்கள் நிலைப்பதற்குள் காலம் அவளைக் கவர்ந்துகொண்டது.
பள்ளிக் குழந்தைகளோடு நீச்சல்பாடம் கற்கச்சென்றவள் நீரில் நனையாமலே உயிரை நீத்துக்கொண்டாள். இயற்கை மரணம் என்று எழுதிவைத்த அறிக்கை சொல்கிறது.
அவள் அன்பு வடிவானவள்.
ஆம் அது அப்படித்தான்!
அவள்மீது பாசம்காட்டிய ஜெர்மானிய பள்ளித்தோழர்களும் வகுப்பாசிரியர்களும் பாடசாலை நிர்வாகிகளும் அவளது இறுதிக் கிரியையின்போது வடித்த கண்ணீர்வெள்ளம் அதை உறுதிப்படுத்துகிறது.

தெய்வம் உண்டென்பதும் நல்லவர்களை அது விரைவில் அழைத்துக்கொள்கிறது என்பதும் நம்மிடையே வழங்கிவரும் நம்பிக்கை. அதை உறுதிப்படுத்தியிருக்கிறாள் கஜனி.
அவள் ஆத்மா சாந்தியடைவதாக!


(கஜனியின் நினைவாக 2001இல் வெளியிடப்பட்ட நினைவுப் பூக்கள் மலரிலிருந்து)