
பூவரசு- 4வது ஆண்டுநிறைவுக்
கலை இலக்கிய மாலை 1995
முமுநிலவு ஒளிபரப்ப
முற்றத்தில் நாம்கூட
பழுத்த தலைமுடியோடும்
நம் பசி தீர்க்க
சோறு குழைப்பாள் நம் அன்னை!
நின்ற நிலையிலேயே
வளைத்தெடுப்போம் ஒருகோப்பையை!
எந்தக் கோப்பையிலும்
கிடைக்காத ஒரு சுகந்தம்
பூவரசு இலை..
இல்லை...இல்லை... பூவரசு இலைக்
கோப்பையிலே கிடைத்திடுமே!
இங்கு முழுநிலவுண்டு
சோறுண்டு பருப்புண்டு
தொட்டுக்கொள்ள ஊறுகாயுமுண்டு
ஆனால்
அன்று முற்றத்தில் கிடைத்த
சுகமில்;லை
ஏங்கினோம்!
வேலையுண்டு பணமுண்டு எனப்
பின்வாங்கினோம்!
பின்பு வங:கிக்கு ஏகினோம்!
நாலு ஆண்டுகளுக்கு முன்னே
கம்பேர்க் ஆட்டோபானில்
பிறேமன் அவுஸ்வார்டில்
ஓரு பூவரசின் மணம் வீசியது!
நாலுபேரைக் கேட்டபோது
இந்த மணம் பரப்பும்
இந்து மகேஷின் வீடும் வேலியும்
இங்குதான் எனத் தெரியவந்தது
இன்று பூவரசு மணம்
பிறேமனோடு நிற்கவில்லை
பிறநாடுகளிலும் மணக்கிறது
ஏன் எம் தாய்நாட்டிலும்
நாட்டிட நல்ல இனப் பூவரசு
இதுதான் என
ஐந்தாவது ஆண்டு நிறையுமுன்னே
ஐரோப்பாவும் முடிவெடுக்கும்
எம் தாய்நாட்டிலும்
தரமான ஒரு பூவரசாக
மணம்பரப்ப வேண்டுமென்று!
- பூவரசு 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.மு.க.சு. சிவகுமாரன் (வெற்றிமணி ஆசிரியர்) அவர்கள் சிறப்புரையில் வழங்கிய வாழ்த்துக் கவிதை-

உலகத்தை இல்லமாக்கி
உள்ளத்தை சொந்தமாக்கிய ஆசிரியர் இந்துமகேஷ்.
-வீ.ஆர்.வரதராஜா
பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய மாலை 15.01.1995 ஞாயிற்றுக்கிழமை பிறேமன் நகரில் சிறப்புற நடைபெற்றது.
ஜேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான கலை இலக்கிய ஆhவலர்களும் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் நிறைவான பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஓவியருமான திரு.க.சிவகுமாரன் (கண்ணா) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
திருமதி வில்ரூட் கடெல்கா, பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி ஆகியோர் மங்களவிளக்கேற்ற திருமதி இந்துமகேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருமதி வசந்தாதேவி புவனேந்திரனின் இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து உலகமே நம் இல்லம், புள்ளிப் புள்ளி மானே, சின்னப் பூவே ஆகிய பாடல்களுக்கு சிறவர் சிறுமியர் அபிநய நடனங்களை அள்ளி வழங்கினர்.
பூவரசு 4வது ஆண்டு மலரின் முதற்பிரதியை பூவரசு வாசகர் வட்ட உறுப்பினர் திரு. இராஜகுமார் அவர்களிடம் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் கையளித்தார்.
பூவரசு வாசகர்வட்ட உறுப்பினர்களான திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார், திரு.மு.சிவராஜா, திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி வதனி விஜயகுமார், திரு வடிவேலு வாசன் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினாhகள்.

பூவரசு 4வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்புக்களை நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றிய திரு. வீ.ஆர் வரதராஜா தொகுத்து வழங்கினார்.
ஜேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான கலை இலக்கிய ஆhவலர்களும் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் நிறைவான பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஓவியருமான திரு.க.சிவகுமாரன் (கண்ணா) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திருமதி வில்ரூட் கடெல்கா, பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி ஆகியோர் மங்களவிளக்கேற்ற திருமதி இந்துமகேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருமதி வசந்தாதேவி புவனேந்திரனின் இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து உலகமே நம் இல்லம், புள்ளிப் புள்ளி மானே, சின்னப் பூவே ஆகிய பாடல்களுக்கு சிறவர் சிறுமியர் அபிநய நடனங்களை அள்ளி வழங்கினர்.
பூவரசு வாசகர்வட்ட உறுப்பினர்களான திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார், திரு.மு.சிவராஜா, திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி வதனி விஜயகுமார், திரு வடிவேலு வாசன் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினாhகள்.

பூவரசு 4வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்புக்களை நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றிய திரு. வீ.ஆர் வரதராஜா தொகுத்து வழங்கினார்.
சிறுகதைக்கான முதற்பரிசை திரு. மா.தியாகேஸ்வரன் அவர்களும், கட்டுரைக்கான முதற்பரிசை திரு.அ.வேணுகோபாலன் அவர்களும், கவிதைக்கான முதற்பரிசை திரு. பொ.கருணாகரமூர்த்தி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களோடு போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் பூவரசு ஊக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது.

ஆண்டுகள்தோறும் புதிதாய் ஒரு கலை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தம பூவரசு இந்த ஆண்டு சிறுவர் சிறுமியரைப் பெரியோராய்ச் சித்தரித்து தாயே உனக்காக என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியிருந்த கவியரங்கு அனைவரையும் வியப்புக் கலந்த மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.
கவியரங்கத் தலைவராக செல்வன் ஜகன் குலதாசன் பங்கேற்க ஆசிரியராக செல்வன் சஜீதன் சந்திரபாலனும், மருத்துவராக செல்வன் ரமணராஜா செல்வரத்தினமும் விவசாயியாக செல்வன் ஆனந்த் குலதாசனும், வயோதிபத் தாயாக செல்வி காயத்திரி யோகநாதனும், போராளிப் பெண்ணாக செல்வி ஜனனி தேவராஜாவும், காய்கறிவிற்கும் பெண்ணாக செல்வி பிரதீபா மகேஸ்வரனும் உருமாற்றம் பெற்று கவிதைகள் பாடி சபையினரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப பெற்றுக்கொண்டனர். கவியரங்கில் பங்குகொண்டவர்களை கொற்றையூர் வாசன் வாழ்த்திக் கவி படித்தார்.
பூவரசு விழாவுக்கு மெருகேற்ற பேர்லினிலிருந்து வருகை தந்திருந்த ஹானப்பிரியா நாட்டியப்பள்ளி மாணவிகளான செல்விகள் தீபனா சற்குணநவராஜா, கிறிஸ்ரல் மரியதாஸ், ஆகியோரின் தனிநடனங்களும், நடன ஆசிரியை திருமதி மேனகா சுரேஸ்குமார் தயாரித்து வழங்கிய கார்த்திகேயா நாட்டிய நாடகமும், மரியன்னை புகழ்பாடும் கோடிவரம் கொடுத்தாய் பாடலுக்கான அபிநய நடனமும் பெருவரவேற்பைப் பெற்றன.
இடைவேளையைத் தொடர்ந்து இசைக்கோலம் மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. பூவரசு விழாக்களில் இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்கள் தொடர்ந்து இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் புதிய பாடல்கள் புதிய மெட்டுக்களில் இசை பரப்பின.
எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களோடு போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் பூவரசு ஊக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது.

ஆண்டுகள்தோறும் புதிதாய் ஒரு கலை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தம பூவரசு இந்த ஆண்டு சிறுவர் சிறுமியரைப் பெரியோராய்ச் சித்தரித்து தாயே உனக்காக என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியிருந்த கவியரங்கு அனைவரையும் வியப்புக் கலந்த மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.
கவியரங்கத் தலைவராக செல்வன் ஜகன் குலதாசன் பங்கேற்க ஆசிரியராக செல்வன் சஜீதன் சந்திரபாலனும், மருத்துவராக செல்வன் ரமணராஜா செல்வரத்தினமும் விவசாயியாக செல்வன் ஆனந்த் குலதாசனும், வயோதிபத் தாயாக செல்வி காயத்திரி யோகநாதனும், போராளிப் பெண்ணாக செல்வி ஜனனி தேவராஜாவும், காய்கறிவிற்கும் பெண்ணாக செல்வி பிரதீபா மகேஸ்வரனும் உருமாற்றம் பெற்று கவிதைகள் பாடி சபையினரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப பெற்றுக்கொண்டனர். கவியரங்கில் பங்குகொண்டவர்களை கொற்றையூர் வாசன் வாழ்த்திக் கவி படித்தார்.
பூவரசு விழாவுக்கு மெருகேற்ற பேர்லினிலிருந்து வருகை தந்திருந்த ஹானப்பிரியா நாட்டியப்பள்ளி மாணவிகளான செல்விகள் தீபனா சற்குணநவராஜா, கிறிஸ்ரல் மரியதாஸ், ஆகியோரின் தனிநடனங்களும், நடன ஆசிரியை திருமதி மேனகா சுரேஸ்குமார் தயாரித்து வழங்கிய கார்த்திகேயா நாட்டிய நாடகமும், மரியன்னை புகழ்பாடும் கோடிவரம் கொடுத்தாய் பாடலுக்கான அபிநய நடனமும் பெருவரவேற்பைப் பெற்றன.
இடைவேளையைத் தொடர்ந்து இசைக்கோலம் மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. பூவரசு விழாக்களில் இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்கள் தொடர்ந்து இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் புதிய பாடல்கள் புதிய மெட்டுக்களில் இசை பரப்பின.

பூவரசு வாசகர் வட்டத்தைச் சோந்த திருவாளர்கள் நடராஜா, பாலசுப்பிரமணியம், ஞானச்செல்வம,; பத்மநாதன், சற்குருநாதன், திருமதிகள் வசந்தாதேவி புவனேந்திரன், பெனடிக்ரா ஞானச்செல்வம், பாமினி உதயகுமார், சசிகலா தேவராஜா ஆகியோருடன் செல்வன் பிரசன்னா, செல்வி பிரதீபா ஆகியோர் கானம் வழங்கிய இம்மெல்லிசை நிகழ்ச்சியின்போது கிற்றார் வாத்தியத்தின் மூலம் தமிழிசைத் துறைக்குப் புகழ் சேர்த்துவரும் கலைஞர்கள் ஜோன்ஸன் சகோதரர்கள் பூவரசு வாசகர் வட்டத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்
பூவரசு வாசகர் வட்டத்தின் சால்ஸ்கிற்றார் உறுப்பினரும் கீபோர்ட் வாத்தியக் கலைஞருமான எஸ்.தேவராஜா இசைநிகழ்ச்சியைப் பொறுப்பேற்றிருந்தார்.
நிகழ்ச்சியின் இறுதி அம்சமாக பூவரசு தயாரித்து வழங்கிய கோடையில் வந்த மழை குறும்படம் இடம்பெற்றது
பெற்றோரை இழந்து அகதியாக வெளிநாடுவந்து துன்பமுறும் ஒரு பிஞ்சு நெஞ்சத்தின் உணர்வுகள் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. பங்குகொண்ட கலைஞர்கள் இயல்பான தங்கள் திறமையால் பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தார்கள்.
பூவரசு ஒவ்வோர் ஆண்டுவிழாவின்போதும் புதிய பல கலைஞர்களை அறிமுகப்படுத்துவது போலவே இந்த ஆண்டும் இரண்டு புதிய அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.
திரு இரா. உதயகுமார், திருமதி சாந்தராணி பத்மகுமார் இருவரும் புதிய அறிவிப்பாளர்களாக அறிமுகமாகி விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
பூவரசு சிறப்புற விழாக்களை நடாத்துவதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பும் உற்சாகமுமே காரணம் என்று தன் நன்றியுரையில் குறிப்பிட்டார் பூவரசு ஆசிரியர் திரு. இந்துமகேஷ்.
எழுத்துப்பணியோடு ஆண்டு தோறும் கலை விழாக்கள் மூலம் கலைப் பணியையும் தொடரும் பூவரசு இனிய தமிழ் ஏடு இம்மாதம் முதல், மாத இதழாக மலரும் என்பது வாசகர்களுக்கு மகிழ்வூட்டும் செய்திதானே!
(நன்றி: தமிழருவி - ஜெர்மனி பெப்ரவரி 1995)
Keine Kommentare:
Kommentar veröffentlichen