Donnerstag, 16. Februar 2017

பூவரசம்பொழுது 98- ஒரு படைப்பாளியின் பார்வையில்!

பூவரசம்பொழுது 98





நானும் துணைவரும் துளிர்த்திட்ட வனப்பு
புலம் பெயர்ந்த காலங்களின் படைப்பிலக்கிய
வரலாற்றில் பதியமிட்ட சஞ்சிகைகளில் .
பூவரசு சஞ்சிகை தனித்துவமானது -கவி 
கதை கட்டுரை சிற்றிலக்கியப் பக்கமாக விரிந்த மலரது !





கை யூட்டீனை நோக்காது பணியைத் தளராது
தாங்கி எழுத்தாளர்களை இந்துமகேசு நூலாசிரியராய் 
அந்தக் காலங்கள் அருமைகளை இனங்காட்டியவர் 
துறைசார் படைப்பிலக்கியங்களாக பகிர்ந்த நாளவை !
உசாத்துணையும் ஊக்கமும் விழாக்களும் 
வித்தகம் பெருக்கின எத்தனை நவீனங்கள் 
எகிறிய போதும் இவை எங்கள் மனதை தைக்கும் 
இதற்காக நானூறு கிலோமீற்றர் தாண்டி -
இணையவைக்கும் என்துணைவரை நெஞ்செந்தும் 
கிரமாக எனது படையல் பூவரசில் பூத்திட 
உறுதுணையானவர் ! 

 - கோசல்யா சொர்ணலிங்கம்
 -(கோசல்யா கவி வரிகள் 199வது )










நினைக்கிறேன்!


உடன்பிறவா சோதரனாய்
உருவெடுத்த என்தம்பி!



நீங்காத நினைவுகளாய்
நெஞ்சத்தில் நிழலாடும்
மகிழ்வான தருணங்கள்
வடிவமைத்தேன் - புதியவர்க்காய்!

அன்றையப் பொழுதுகளில்
உடனிருந்து மகிழ்ந்தவர்கள்
எங்கெங்கோ...?!
ஒரு சிலரோ 
இவ்வுலகை மறந்தார்கள்!
உறவுகளாய் நண்பர்களாய் 
உறவாடிக் களித்தவர்கள்
உலகிழந்தபோதும் எந்தன்
உள்ளத்தைப் பிரியவில்லை!


  (அமரர் சுப்பிரமணியம் சொர்ணலிங்கம்)

உடன்பிறவா சோதரனாய்
உருவெடுத்த என்தம்பி
சொர்ண லிங்கமாகத் 
துடிப்போடு இயங்கியவன்
கோசல்யா என்னும் 
கவிக்குயிலின் உயிரானான்
நேசமிகு மனத்தோடு
நிறைவாக வாழ்ந்திருந்தான்!

கலையார்வம் நிறைநெஞ்சம்
காணாமல் போனதின்று
நிலையாக எம்மோடு
வாழ்ந்திருக்கும் என்றென்றும்!

- இந்துமகேஷ்.








Keine Kommentare: