Montag, 25. August 2014

பூவரசு மலர்ந்தது


பூவரசு முதலாவது இதழிலிருந்து...


பூவரசு
மேற்கு ஜெர்மனியின் பிறேமன் நகரிலிருந்து
புதிதாய்த் துளிர்விட்டிருக்கும்
பூவரசு என்கின்ற இந்தப் புதிய தமிழ் ஏட்டினை
உங்கள் கரங்களில் தவழவிடுவதில்
நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
பூவரசு
புதிய படைப்பாளிகளையும் வரவேற்பதோடு
மனிதநேயத்துடன் வரையப்படும் அனைத்து
ஆக்கங்களையும் ஆதரிக்கும்.
எழுத்தாளன் என்பவன் யாருக்கும் கைதியில்லை
அவன் சுதந்திரமாய்ச் சிந்திக்கவேண்டும்
சுதந்திரமாய்ச் சொல்ல வேண்டும்
சுதந்திரமாய் எழுதவேண்டும்.
ஆனால் சிந்திப்பதும் சொல்வதும் எழுதுவதும்
ஒரு சமுதாய நலனோடு இணைந்திருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட படைப்புக்களையே கலைஞர்கள்
தரவேண்டும்.
உங்கள் சிந்தனைகளை கற்பனைகளை
எழுத்தில் வடியுங்கள். உங்கள் கருத்துக்கள்
எங்களோடு ஒத்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.
மனிதநேயத்தோடு தமிழர்க்காய் அது ஏதேனும் சொல்வதெனில்
எங்களுக்குச் சம்மதமே. பூவரசு அதைப் புனிதமாய் வரவேற்கும்.
மனிதநேயத்தைத் தேடுவோர் பூவரசைப் புரிந்து வரவேற்பர்
என்று நம்புகிறோம்.
பூவரசு இப்போது இரு திங்களுக்கு ஒருமுறை என்று
ஆரம்பித்திருக்கிறோம். உங்கள் ஆதரவு கண்டு இது
மாதம் ஒருமுறை மலரும் சாத்தியமுண்டு.
நமது சந்திப்புக்கள் தொடரும்.

அன்புடன்
சின்னையா மகேஸ்வரன்

(1991 தைத்திங்களில் வெளியான பூவரசு முதல் இதழில் ஆசிரியர் குறிப்பு)

Keine Kommentare: