Sonntag, 24. August 2014

இறைவணக்கம்

இறைவணக்கம்.


ஆதிமுதற் பொருளே
அன்புவடிவானவனே
வானுலகம் முதலாய்
மண்ணுலகம் காப்பவனே
(ஆதிமுதற்பொருளே)
வேதங்களின் பொருளாய்
விளங்கும் அருட்கடலே
பாதங்களைப் பணிந்தோம்
பரிவுடன் காத்திடுவாய்.
(ஆதிமுதற்பொருளே)
வாழும் உயிர்படைத்தாய்
மண்காற்று தீ முதலாய்
சூழும் இயற்கையெல்லாம்
தூயவனே நீ நிறைந்தாய்
(ஆதிமுதற்பொருளே)
வாதங்களில் வளர்ந்தாய்
வளர் மதியாய்க்கனிந்தாய்
பேதங்களில் மயங்கும்
பித்தருக்கும் அருள்புரிந்தாய்
(ஆதிமுதற்பொருளே)
காணும் ஒளிவடிவில்
கருணையென நீ நிறைந்தாய்
பூணும் அறத்திலெல்லாம்
புண்ணியனே நீ நிறைந்தாய்
(ஆதிமுதற்பொருளே)
நாமமெல்லாம் உமதே
நன்மை தீமை உன் செயலே
தேமதுரத் தமிழால்
தேடிச் சரண் புகுந்தோம்.
(ஆதிமுதற்பொருளே)



குறிப்பு:

( அருவமாய் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் நின்றாளும் இறைவனை - எம்மதமும் சம்மதமாய்க் கொண்டாடும் உள்ளங்களில் நின்றாடும் தலைவனை - துதிபாடும் முயற்சியாக நான் 1991இல் வரைந்த 
இந்த இறைவணக்கப் பாடல் பூவரசு விழாக்களில் முதற் பாடலாக ஒலிக்கும்.
இப்போது என்புதுவீட்டுக்கு குடிபுகும்போதும் முதற்பாடலாய் ஒலிக்கிறது)

Keine Kommentare: