பூவரசு கலை இலக்கியப் பேரவையின்
நூலகக் கண்காட்சி- 1998

பிறேமன் புகையிரத நிலையத்தின் முன்னாலிருந்த பஸ் தரிப்பிடம்.
பிறேமன் ரெனேவரிலிருந்து வரும் பஸ்ஸூக்காகக் காத்திருந்தான் ராகுல்.
சிறிதுநேரத்தில் பஸ் வர, சனங்களோடு முண்டியடித்துக் கொண்டு ஏறியவனை பஸ்ஸினுள் இருந்து ஒரு தமிழ்க்குரல் அழைக்க.... திரும்பிப் பார்த்தான். அங்கே ரவியும் ரகுவும் அமர்ந்திருந்தனர்.
ராகுல்: ஹலோ...
(அவர்களுக்கு அருகே போய் அமர்ந்துகொண்டான் ராகுல்.)
ராகுல்: எங்க ரண்டுபேரும் போயிட்டு வர்றீங்க.... வெயில் எறிக்க வெளியே
வெளிக்கிட்டாச்சா...
ரவி: அடோ... நாங்க என்ன 'சமர்"ரிலை சமறுறமென்றா சொல்றாய்...
எவ்வளவு நல்லதொரு காட்சியை பார்த்துவிட்டு வர்றோம்... உனக்கு
இது எல்லாம் தெரியாது... கிணற்றுத் தவளைபோல வேலை....
வீடு... வேறென்ன தெரியும்...
ராகுல்: கோபிக்காதே... என்ன காட்சி என்றுதான் சொல்லேன்...
ரகு: மார்ச் 14, 15, 16 திகதிகளில் பிறேமன் ரெனேவர் கலாச்சார நிலைய
மண்டபத்தில் பூவரசு கலை, இலக்கியப் பேரவை நடாத்திய நூலகக்
கண்காட்சியைப்பற்றிக் கேள்விப் படவில்லையே?
ரவி: வேறேதாவது காட்சியென்றால் கேள்விப்பட்டிருப்பான்...
ராகுல்: அடடா... அடடா.... மறந்துவிட்டேன்.... இன்றுதான் இறுதி
நாளாக்கும்.... அங்கிருந்துதான் வர்றீங்களா...
ரகு: நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டாய்.... இப்படியொரு
நிகழ்வை பூவரசு ஆசிரியரின் மேற்பார்வையில், இலக்கியப்
பேரவையினர் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த விதம்
பாராட்டத்தக்கது...
ராகுல்: நேற்றுப் போனனீங்களா?
ரவி: நேற்று மட்டுமல்ல... முந்தநாளும் போனோம்... திருமதி வில்ரூட்
கடெல்கா, திருமதி சிவபுஸ்பா இராஜன் ஆகியோர் மங்கள
விளக்கேற்ற, பேரவைக்கீதத்துடன் நூலகக் கண்காட்சி ஆரம்ப
மானது.
ரகு: முதலில் திரு இந்துமகேஷ் அவர்கள், பூவரசு சஞ்சிகையின் ஆரம்ப
நிலைபற்றியும் அது சந்தித்த பொருளாதார நெருக்கடிகள்பற்றியும்,
இன்று அது இளந்தளிர்கள்... கலை இலக்கியப் பேரவை, பூவரசம்பூ
வீடியோ மலர் என விருட்சமாகி விழுதுகள் விடுவதையும், அதற்கு
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பூவரசுக்குப் பக்கபலமாக
இருப்பவர்களையும்.... இருந்தவர்களையும்... இன்று பூவரசுடன்
தம்மை இணைத்துக் கொள்பவர்களைப்பற்றியும் வரவேற்றுப்
பேசினார்...
ரவி: உண்மைதான்... அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐரோப்பா,
கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைத்
தமிழர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட ஏறக்குறைய நூறு
வரையிலான சஞ்சிகைகளைப் பார்க்கையில்... அவற்றுள் இன்று
எத்தனை வருகின்றன... பெரும்பாலானவை ஏன் நின்று போயின...
என்று எண்ணிப் பார்க்கையில்தான் பூவரசு சஞ்சிகையின்
வருகையும், அதற்காக திரு இந்துமகேஷ் அவர்களின் விடா
முயற்சியும், தனது உயரிய நோக்கிற்கான இழப்புக்களைப் பொருட்
படுத்தாத தன்மையும் தெள்ளத்தெளிவாகிறது...

ராகுல்: நூற்றுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளை சேகரித்திருக்கிறாரே...
அவற்றின் அறிமுகத்தை பூவரசு வாசகருடன் பகிர்ந்திருக்கிறாரே...
அது நிச்சயம் பாராட்டத்தக்கது...
ரகு: உண்மைதான். புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றைப் பதிவுசெய்து
எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்தும் பாரிய பணியை இச்
சஞ்சிகைகள்தான் செய்யமுடியும். அந்த வகையில் சஞ்சிகைகளின்
சேகரிப்பும் பாதுகாப்பும் அவசியமானதென்பதை சொல்லாமல் செய்து
காட்டியிருக்கிறார் பூவரசு ஆசிரியர்.
ரவி: அதுமட்டுமல்ல... மலேசியா, இந்தியா போன்ற நாடுகளின் சிற்றேடுகள்
சிலவும் அங்கு காட்சிக்கிருந்தன.
ராகுல்: பூவரசில் கையெழுத்துப் பிரதிகள்பற்றிய புத்தகம் ஒன்று விரைவில்
அறிவிப்பொன்று வெளியாகிக்கொண்டிருந்தது... அது அங்கு
வெளியிடப்பட்டதா?
ரவி: இல்லை. ஆனால் ஆசிரியர் அதற்கு விளக்கமளித்தார்... அதாவது
அவர் பலமுறை அதுபற்றி அறிவித்தல் செய்தும் பல சஞ்சிகை
ஆசிரியர்கள் அதுபற்றி அக்கறைப்படாதது முக்கிய காரணம்...
ரகு: பல சஞ்சிகை ஆசிரியர்கள் அதே முகவரியில் இருக்கிறார்களோ...
அல்லது அதே நாட்டில் உள்ளார்களா என்பதே கேள்விக்குறி...
ராகுல்: இப்போது கைவசம் உள்ள சஞ்சிகைகளிலிருந்து தரமான
ஆக்கங்களை தொகுத்து சஞ்சிகைகள்பற்றிய அறிமுக நூலை
வெளியிடலாமே...
ரகு: அதிலும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், சம்பந்தப்பட்ட
சஞ்சிகையாளர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுவதென்பது
சரியில்லை... இதையெல்லாம் ஒரு தனிமனிதராக நின்று
நிறைவேற்றுவதென்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் விளங்கும்...
ராகுல்: தொடர்ந்து என்ன நடந்தது...
ரவி: தொடர்ந்து பூவரசின் ஐம்பதாவது இதழின் முதற்பிரதியை திருமதி வசந்தாதேவி
புவனேந்திரன் திருமதி. கமலாம்பிகை மகேந்திரமூர்த்தியிடம் கையளித்தார்.
அத்துடன் திரு. இராஜன் முருகவேலின் யவ்வனமில்லாத
யதார்த்தங்கள் என்ற சிறுகதைத்தொகுதி வெளியீடும் நிகழ்ந்தது.
அதன் முதற்பிரதியை திருமதி. பெனடிக்ரா ஞானச்செல்வம், புகைப்படக் கலைஞர் திரு.
எஸ். தேவராஜா அவர்களிடம் வழங்கினார்.
ராகுல்: இதைப்பற்றி இராஜன் முருகவேல் ஏதாவது கூறினாரா?
ரவி: அவர் சொன்னதில் முக்கியமான விடயம் என்னவென்றால, திரு
இந்துமகேஷ் அவர்கள் எவ்வளவோ ஆக்கங்களை எழுதினாலும்,
தனது சிறுகதைகளைப் புத்தக உருவில் வெளியிட்ட
பெருந்தன்மையையும், புது எழுத்தாளர்களுக்கு அளித்துவரும்
ஊக்கத்தைப்பற்றியும் குறிப்பிட்டார்.
ராகுல்: ரண்டாவது நாள் என்ன நடந்தது?
ரகு: ரண்டாம் நாள் பூவரசு கலை இலக்கியப் பேரவையின் ஊக்குவிப்பில்,
பிறீமன் முத்துக்கள் மூன்றின் முத்துமாலை வீடியோ மலர்
வெளியீடு ஆக்கிரமித்துக் கொண்டது.
ரவி: ஐரோப்பாவிலேயே மூன்று சிறுவர்களின் உருவாக்கத்தில் முதல்
தடவையாக வெளிவந்திருக்கும் இந்த வீடியோ மலரின்
முதற்பிரதியை திரு இந்துமகேஷ் அவர்கள் உலகத் தமிழர் இயக்க
செயலாளர் திரு இரா சோமஸ்கந்தரிடம் கையளித்தார்.
ராகுல்: முத்துக்கள் மூன்று என்று பெயர் சூட்டியதே பூவரசு
ஆசிரியர்தானே?!
ரவி: ஆமாம்... அவரால் பெயர் சூட்டப்பட்டவர்களின் வெளியீட்டுக்கு
இடமளித்தது ஆசிரியரின் இளந்தளிர்களான எதிர்காலத் தமிழர்களின்
மீதுள்ள அக்கறைக்கு அச்சாரமாக திகழ்ந்தது.
ரகு: மூன்றாவது நாள் திரு ஞானச்செல்வம் உட்பட பூவரசு கலை
இலக்கியப் பேரவையினர் பலர் பங்குகொண்ட 'புலம்பெயர்ந்த
தமிழரிடையே மனிதநேயம் வற்றிவிட்டதா?" என்னும் தலைப்பிலான
கருத்தரங்கு பலரது கருத்துப் பரிமாற்றங்களுடன் கனதியாக
இடம்பெற்றது.
ராகுல்: இந்தக் கருத்தரங்கின் முடிவு எப்படியிருந்தது?
ரகு: எப்படியிருக்க வேண்டும்? இது ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்கான
முன்னெடுப்பு மாத்திரமே. இது பூவரசிலும் தொடர்ந்து வருவதன்
மூலம் வாசகர்களையும் மனிதநேயம்பக்கம் சிந்திக்கத் தூண்ட
வேண்டுமென்பது எனது கருத்து.
ரவி: இறுதியாக பூவரசு ஆசிரியரின் நன்றியுரையுடன், பூவரசு கலை
இலக்கியப் பேரவையினரின் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இப்படியானதொரு நிகழ்வு இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்,
வாசகர்கள் மத்தியில் ஒரு இறுக்கமான நெருக்கத்தையும்-
புரிந்துணர்வையும் ஏற்படுத்துமென்றால் மிகையாகாது.
ராகுல்: அதுமட்டுமல்ல.... இவ்வளவு சஞ்சிகைகளைச் சேகரித்து
காட்சிக்கு வைத்த செயலானது, புதிய சஞ்சிகைகளின் வரவிற்கும்,
தம்மை மற்றவர்கள் அவதானிக்கிறார்கள் என்ற நினைவால்-
அவை காத்திரமாவதற்கும் ஏதுவாகும்....
ரகு: உண்மைதான்.... இப்படியான செயல்களால் பூவரசு தனது பணிகளில்
தொடர்ந்தும் உத்வேகத்துடன் முன்னேற- வாசகர்கள்...
எழுத்தாளர்கள் என்று சகல புகலிடத் தமிழர்கள் யாவரும் பூவரசு
கலை இலக்கியப் பேரவையில் இணைந்து, பூவரசு ஆசிரியரின்
கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.
ராகுல்: தற்போது நான் உங்களின் கைகளைப்பற்றிக் குலுக்க
விரும்புகிறேன்.... நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...
- அவதானி
(பூவரசு வைகாசி - ஆனி1998 இதழில் வெளியான கட்டுரை. அவதானி என்ற பெயரில் இராஜன் முருகவேல் எழுதியது)
நூலகக் கண்காட்சி- 1998

பிறேமன் புகையிரத நிலையத்தின் முன்னாலிருந்த பஸ் தரிப்பிடம்.
பிறேமன் ரெனேவரிலிருந்து வரும் பஸ்ஸூக்காகக் காத்திருந்தான் ராகுல்.
சிறிதுநேரத்தில் பஸ் வர, சனங்களோடு முண்டியடித்துக் கொண்டு ஏறியவனை பஸ்ஸினுள் இருந்து ஒரு தமிழ்க்குரல் அழைக்க.... திரும்பிப் பார்த்தான். அங்கே ரவியும் ரகுவும் அமர்ந்திருந்தனர்.
ராகுல்: ஹலோ...
(அவர்களுக்கு அருகே போய் அமர்ந்துகொண்டான் ராகுல்.)
ராகுல்: எங்க ரண்டுபேரும் போயிட்டு வர்றீங்க.... வெயில் எறிக்க வெளியே
வெளிக்கிட்டாச்சா...
ரவி: அடோ... நாங்க என்ன 'சமர்"ரிலை சமறுறமென்றா சொல்றாய்...
எவ்வளவு நல்லதொரு காட்சியை பார்த்துவிட்டு வர்றோம்... உனக்கு
இது எல்லாம் தெரியாது... கிணற்றுத் தவளைபோல வேலை....
வீடு... வேறென்ன தெரியும்...
ராகுல்: கோபிக்காதே... என்ன காட்சி என்றுதான் சொல்லேன்...
ரகு: மார்ச் 14, 15, 16 திகதிகளில் பிறேமன் ரெனேவர் கலாச்சார நிலைய
மண்டபத்தில் பூவரசு கலை, இலக்கியப் பேரவை நடாத்திய நூலகக்
கண்காட்சியைப்பற்றிக் கேள்விப் படவில்லையே?
ரவி: வேறேதாவது காட்சியென்றால் கேள்விப்பட்டிருப்பான்...
ராகுல்: அடடா... அடடா.... மறந்துவிட்டேன்.... இன்றுதான் இறுதி
நாளாக்கும்.... அங்கிருந்துதான் வர்றீங்களா...
ரகு: நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டாய்.... இப்படியொரு
நிகழ்வை பூவரசு ஆசிரியரின் மேற்பார்வையில், இலக்கியப்
பேரவையினர் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த விதம்
பாராட்டத்தக்கது...
ராகுல்: நேற்றுப் போனனீங்களா?
ரவி: நேற்று மட்டுமல்ல... முந்தநாளும் போனோம்... திருமதி வில்ரூட்
கடெல்கா, திருமதி சிவபுஸ்பா இராஜன் ஆகியோர் மங்கள
விளக்கேற்ற, பேரவைக்கீதத்துடன் நூலகக் கண்காட்சி ஆரம்ப
மானது.
ரகு: முதலில் திரு இந்துமகேஷ் அவர்கள், பூவரசு சஞ்சிகையின் ஆரம்ப
நிலைபற்றியும் அது சந்தித்த பொருளாதார நெருக்கடிகள்பற்றியும்,
இன்று அது இளந்தளிர்கள்... கலை இலக்கியப் பேரவை, பூவரசம்பூ
வீடியோ மலர் என விருட்சமாகி விழுதுகள் விடுவதையும், அதற்கு
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பூவரசுக்குப் பக்கபலமாக
இருப்பவர்களையும்.... இருந்தவர்களையும்... இன்று பூவரசுடன்
தம்மை இணைத்துக் கொள்பவர்களைப்பற்றியும் வரவேற்றுப்
பேசினார்...
ரவி: உண்மைதான்... அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐரோப்பா,
கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைத்
தமிழர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட ஏறக்குறைய நூறு
வரையிலான சஞ்சிகைகளைப் பார்க்கையில்... அவற்றுள் இன்று
எத்தனை வருகின்றன... பெரும்பாலானவை ஏன் நின்று போயின...
என்று எண்ணிப் பார்க்கையில்தான் பூவரசு சஞ்சிகையின்
வருகையும், அதற்காக திரு இந்துமகேஷ் அவர்களின் விடா
முயற்சியும், தனது உயரிய நோக்கிற்கான இழப்புக்களைப் பொருட்
படுத்தாத தன்மையும் தெள்ளத்தெளிவாகிறது...

ராகுல்: நூற்றுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளை சேகரித்திருக்கிறாரே...
அவற்றின் அறிமுகத்தை பூவரசு வாசகருடன் பகிர்ந்திருக்கிறாரே...
அது நிச்சயம் பாராட்டத்தக்கது...
ரகு: உண்மைதான். புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றைப் பதிவுசெய்து
எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்தும் பாரிய பணியை இச்
சஞ்சிகைகள்தான் செய்யமுடியும். அந்த வகையில் சஞ்சிகைகளின்
சேகரிப்பும் பாதுகாப்பும் அவசியமானதென்பதை சொல்லாமல் செய்து
காட்டியிருக்கிறார் பூவரசு ஆசிரியர்.
ரவி: அதுமட்டுமல்ல... மலேசியா, இந்தியா போன்ற நாடுகளின் சிற்றேடுகள்
சிலவும் அங்கு காட்சிக்கிருந்தன.
ராகுல்: பூவரசில் கையெழுத்துப் பிரதிகள்பற்றிய புத்தகம் ஒன்று விரைவில்
அறிவிப்பொன்று வெளியாகிக்கொண்டிருந்தது... அது அங்கு
வெளியிடப்பட்டதா?
ரவி: இல்லை. ஆனால் ஆசிரியர் அதற்கு விளக்கமளித்தார்... அதாவது
அவர் பலமுறை அதுபற்றி அறிவித்தல் செய்தும் பல சஞ்சிகை
ஆசிரியர்கள் அதுபற்றி அக்கறைப்படாதது முக்கிய காரணம்...
ரகு: பல சஞ்சிகை ஆசிரியர்கள் அதே முகவரியில் இருக்கிறார்களோ...
அல்லது அதே நாட்டில் உள்ளார்களா என்பதே கேள்விக்குறி...
ராகுல்: இப்போது கைவசம் உள்ள சஞ்சிகைகளிலிருந்து தரமான
ஆக்கங்களை தொகுத்து சஞ்சிகைகள்பற்றிய அறிமுக நூலை
வெளியிடலாமே...

ரகு: அதிலும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், சம்பந்தப்பட்ட
சஞ்சிகையாளர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுவதென்பது
சரியில்லை... இதையெல்லாம் ஒரு தனிமனிதராக நின்று
நிறைவேற்றுவதென்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் விளங்கும்...
ராகுல்: தொடர்ந்து என்ன நடந்தது...

ரவி: தொடர்ந்து பூவரசின் ஐம்பதாவது இதழின் முதற்பிரதியை திருமதி வசந்தாதேவி
புவனேந்திரன் திருமதி. கமலாம்பிகை மகேந்திரமூர்த்தியிடம் கையளித்தார்.
அத்துடன் திரு. இராஜன் முருகவேலின் யவ்வனமில்லாத
யதார்த்தங்கள் என்ற சிறுகதைத்தொகுதி வெளியீடும் நிகழ்ந்தது.

எஸ். தேவராஜா அவர்களிடம் வழங்கினார்.
ராகுல்: இதைப்பற்றி இராஜன் முருகவேல் ஏதாவது கூறினாரா?
ரவி: அவர் சொன்னதில் முக்கியமான விடயம் என்னவென்றால, திரு
இந்துமகேஷ் அவர்கள் எவ்வளவோ ஆக்கங்களை எழுதினாலும்,
தனது சிறுகதைகளைப் புத்தக உருவில் வெளியிட்ட
பெருந்தன்மையையும், புது எழுத்தாளர்களுக்கு அளித்துவரும்
ஊக்கத்தைப்பற்றியும் குறிப்பிட்டார்.
ராகுல்: ரண்டாவது நாள் என்ன நடந்தது?
ரகு: ரண்டாம் நாள் பூவரசு கலை இலக்கியப் பேரவையின் ஊக்குவிப்பில்,
பிறீமன் முத்துக்கள் மூன்றின் முத்துமாலை வீடியோ மலர்
வெளியீடு ஆக்கிரமித்துக் கொண்டது.
ரவி: ஐரோப்பாவிலேயே மூன்று சிறுவர்களின் உருவாக்கத்தில் முதல்
தடவையாக வெளிவந்திருக்கும் இந்த வீடியோ மலரின்
முதற்பிரதியை திரு இந்துமகேஷ் அவர்கள் உலகத் தமிழர் இயக்க
செயலாளர் திரு இரா சோமஸ்கந்தரிடம் கையளித்தார்.
ராகுல்: முத்துக்கள் மூன்று என்று பெயர் சூட்டியதே பூவரசு
ஆசிரியர்தானே?!
ரவி: ஆமாம்... அவரால் பெயர் சூட்டப்பட்டவர்களின் வெளியீட்டுக்கு
இடமளித்தது ஆசிரியரின் இளந்தளிர்களான எதிர்காலத் தமிழர்களின்
மீதுள்ள அக்கறைக்கு அச்சாரமாக திகழ்ந்தது.
ரகு: மூன்றாவது நாள் திரு ஞானச்செல்வம் உட்பட பூவரசு கலை
இலக்கியப் பேரவையினர் பலர் பங்குகொண்ட 'புலம்பெயர்ந்த
தமிழரிடையே மனிதநேயம் வற்றிவிட்டதா?" என்னும் தலைப்பிலான
கருத்தரங்கு பலரது கருத்துப் பரிமாற்றங்களுடன் கனதியாக
இடம்பெற்றது.
ராகுல்: இந்தக் கருத்தரங்கின் முடிவு எப்படியிருந்தது?
ரகு: எப்படியிருக்க வேண்டும்? இது ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்கான
முன்னெடுப்பு மாத்திரமே. இது பூவரசிலும் தொடர்ந்து வருவதன்
மூலம் வாசகர்களையும் மனிதநேயம்பக்கம் சிந்திக்கத் தூண்ட
வேண்டுமென்பது எனது கருத்து.
ரவி: இறுதியாக பூவரசு ஆசிரியரின் நன்றியுரையுடன், பூவரசு கலை
இலக்கியப் பேரவையினரின் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இப்படியானதொரு நிகழ்வு இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்,
வாசகர்கள் மத்தியில் ஒரு இறுக்கமான நெருக்கத்தையும்-
புரிந்துணர்வையும் ஏற்படுத்துமென்றால் மிகையாகாது.
ராகுல்: அதுமட்டுமல்ல.... இவ்வளவு சஞ்சிகைகளைச் சேகரித்து
காட்சிக்கு வைத்த செயலானது, புதிய சஞ்சிகைகளின் வரவிற்கும்,
தம்மை மற்றவர்கள் அவதானிக்கிறார்கள் என்ற நினைவால்-
அவை காத்திரமாவதற்கும் ஏதுவாகும்....
ரகு: உண்மைதான்.... இப்படியான செயல்களால் பூவரசு தனது பணிகளில்
தொடர்ந்தும் உத்வேகத்துடன் முன்னேற- வாசகர்கள்...
எழுத்தாளர்கள் என்று சகல புகலிடத் தமிழர்கள் யாவரும் பூவரசு
கலை இலக்கியப் பேரவையில் இணைந்து, பூவரசு ஆசிரியரின்
கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.
ராகுல்: தற்போது நான் உங்களின் கைகளைப்பற்றிக் குலுக்க
விரும்புகிறேன்.... நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...
- அவதானி
Keine Kommentare:
Kommentar veröffentlichen