கவிதை-1
கிட்டத்தில் தெரிகின்ற வானமது
நெருங்குகையில்
எட்டத்தில் போகின்ற
எழிற்கோலம்!
பட்டுப் பட்டென்றே அடித்தந்த
வான் வெளியில்
பாடிக் களிக்கின்ற
சிட்டுக்கள் அங்கே
எதைத் தேடிச் செல்கிறது?

மனிதனவன்
எண்ணச் சிறகுகளை
விரித்துப் பறக்கின்றான்
கிட்டத்தில் நிற்கின்ற தொடுவானம்
அவனைவிட்டு
எட்டத்தில் போகின்ற
இயல்புதனைக் கண்டபின்னும்
விட்டுவிடா ஆசைகள் போல்
விரிகின்ற வானத்தில்
பட்டுப்பட்டென்றே தன்
மனச்சிறகை விரிக்கின்றான்.
தொட்டுத் தொடர்கின்றான்
தொடுவானம் சிக்கிடுமா?
விட்டுவிடா ஆசைகள் போல்
விரிகின்ற வானமது
எட்டிப் பிடித்துவிட
இன்னும் நாம் மேலே போய்...
ஓ.. அந்தத் தொடுவானம்..?
- கே.விக்கினேஷ்
(பூவரசு 1991 தை-மாசி இதழில்
வெளியான கவிதை)
வெளியான கவிதை)
Keine Kommentare:
Kommentar veröffentlichen